Sunday, 17 October 2010

மரணமே வந்தாலும்

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நட்பே!!!!!
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் "நட்பு ஒரு சுமையல்ல"

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உற‌வாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை


"நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோல்வியின் போது கை கொடுக்கும் ந‌ண்ப‌னின்/ந‌ண்பியின் ஒரு விரலே சிறந்தது"

No comments:

Post a Comment