தினமும் தினமும்
கொள்ளும் உன்
நினைவுகள்
என்
உயிரில் உயிரில்
கலந்தே நிறைந்திருக்கும்
வானும் மண்ணும் போதாதே
உன் அன்பிற்கு ஈடு கொடுக்க
வானமாகி நீயும்
நிலம் போலே நானும்
இருப்போமே நாம் _ நம்
வாழ்வில்
பிரிந்தே இருந்தாலும்
வானின்றி நிலமில்லை
உணரும் சமூதாயம் - நம்
நட்பை
காலம் பதில் சொல்லும்
வாழ்க்கை முடிகையில்
வாழ்வோம் வாழ்வோம் - நாம்
நண்பர்களாக
ஓர் நாளும் வரும்
அருகருகே நாம் இருப்போம்
மடிவேனே நான் - உன்
மடி மீதே
பார் கண்ட நட்புகள்
பலவென இருந்தாலும்
பாரும் வியக்கும் - நம்
நட்பை
No comments:
Post a Comment