Sunday, 17 October 2010

உண்மையான‌ ந‌ட்பு

உரிமை சொல்ல‌ ப‌ல‌ உற‌வுக‌ள்
இருந்தாலும்................

உள்ள‌த்தை புரிந்து கொள்ள‌
ஒரு உயிர் போதும்...................


அதுதான் உண்மையான‌ ந‌ட்பு

மரணமே வந்தாலும்

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நட்பே!!!!!
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் "நட்பு ஒரு சுமையல்ல"

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உற‌வாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை


"நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோல்வியின் போது கை கொடுக்கும் ந‌ண்ப‌னின்/ந‌ண்பியின் ஒரு விரலே சிறந்தது"

நண்பி.... நண்பி.....

நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....

நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............தொடர்வாயா
உன் நட்பை
இறுதி வரை..........?

உண்மை உலகறியும்

தினமும் தினமும்
கொள்ளும் உன்
நினைவுகள்
என்
உயிரில் உயிரில்
கலந்தே நிறைந்திருக்கும்

வானும் மண்ணும் போதாதே
உன் அன்பிற்கு ஈடு கொடுக்க

வானமாகி நீயும்
நிலம் போலே நானும்
இருப்போமே நாம் _ நம்
வாழ்வில்

"பிரிந்தே இருந்தாலும்
வானின்றி நிலமில்லை
உணரும் சமூதாயம் - நம்
நட்பை"

காலம் பதில் சொல்லும்
வாழ்க்கை முடிகையில்
வாழ்வோம் வாழ்வோம் - நாம்
நண்பர்களாக

ஓர் நாளும் வரும்
அருகருகே நாம் இருப்போம்
மடிவேனே நான் - உன்
மடி மீதே

பார் கண்ட நட்புகள்
பலவென இருந்தாலும்
பாரும் வியக்கும் - நம்
நட்பை

உண்மை உலகறியும்

தினமும் தினமும்
கொள்ளும் உன்
நினைவுகள்
என்
உயிரில் உயிரில்
கலந்தே நிறைந்திருக்கும்

வானும் மண்ணும் போதாதே
உன் அன்பிற்கு ஈடு கொடுக்க

வானமாகி நீயும்
நிலம் போலே நானும்
இருப்போமே நாம் _ நம்
வாழ்வில்

பிரிந்தே இருந்தாலும்
வானின்றி நிலமில்லை
உணரும் சமூதாயம் - நம்
நட்பை

காலம் பதில் சொல்லும்
வாழ்க்கை முடிகையில்
வாழ்வோம் வாழ்வோம் - நாம்
நண்பர்களாக

ஓர் நாளும் வரும்
அருகருகே நாம் இருப்போம்
மடிவேனே நான் - உன்
மடி மீதே

பார் கண்ட நட்புகள்
பலவென இருந்தாலும்
பாரும் வியக்கும் - நம்
நட்பை

Tuesday, 12 October 2010



ஆழ‌மான‌ ந‌ட்பு அழ‌கையோ அந்த‌ஸ்த்தையோ பார்ப்ப‌தில்லை........ அது உயிரையும் ம‌ன‌சையும் ம‌ட்டுமே நேசிக்கும்............ பார்ப்ப‌வ‌ர்க‌ளின் க‌ண்ணுக்கு ந‌‌ட்பு கூட‌ வித்தியாச‌மாய் தோன்றாலாம்........ ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தான் தெரியும் அவ‌ர்க‌ள‌து ந‌ட்பு.............

ப‌ல‌ நாட்க‌ளின் பின் ந‌ண்ப‌னை ச‌ந்திக்கும் போது..................

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

Monday, 11 October 2010

நட்பு கவிதை

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

ந‌ட்பு











சிறகுகள் கிடைத்தவுடன்
பறப்பதல்ல நட்பு . . .


சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதே நட்பு . . .